திருச்சி அருகே கார் மோதி விபத்து- பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 5 பேர் பலி
திருச்சி அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாலப்பட்டி பிரிவு அருகே திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலை உள்ளது. அவ்வழியே பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற கார் ஒன்று, நிலைதடுமாறி ஓடியது. இதையடுத்து சாலையோரம் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக மோதியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்தவர்கள் திருச்சியை சேர்ந்த சண்முக கண்ணு, ஹரிஹரசுதன், சீனிவாசன், சலீம் மற்றும் துவாரக் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications