துப்பாக்கி சூடு கேள்விய அப்புறம் கேளுங்க.. மும்மொழி கொள்கைதான் அவசியம்.. நிர்மலா சீதாராமன் திமிர்
மீனவர் மீதான துப்பாக்கி சூடு, பிரிட்ஜோ மரணம் குறித்த கேள்வியை அப்புறம் கேளுங்க என்று சொல்லி விட்டு மும்மொழிக் கொள்கை தொடர்பாக மூச்சுபிடிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிவிட்டுச் சென்றார்.
சென்னை: கணிதம், அறிவியலை படித்துவிட்டு தாய்மொழியைக் கூட படிப்பதில்லை என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மொழிகளைப் படிப்பதால் மனித வளர்ச்சி, கலாச்சாரம் எல்லாம் நன்றாக வளரும். மும்மொழி கொள்கை அறிவிக்கப்பட்ட உடன் அது சமஸ்கிருத திணிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. அதன் உண்மையான நோக்கம் அது இல்லை. மும்மொழி கொள்கை என்றுதான் சொல்கிறோமே ஒழிய அதில் சமஸ்கிருதம் வேண்டும் என்று நாங்கள் சொல்ல வில்லை.

பாஜக பிறப்பதற்கு முன்பிருந்தே மும்மொழிக் கொள்கை பற்றி இந்தியாவில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மும்மொழி படிப்பதால் நிறைய மொழிகளை படிக்கலாம். மொழியை நிறைய படிக்க படிக்க பிள்ளைகளின் பேசும் திறன் அதிகரிக்கும். பல மொழிகளை கற்பதால் நாட்டை நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும்.
மும்மொழி கொள்கையை ஏற்காத பல மாநிலங்கள் உள்ளன. நான் தமிழ்நாட்டை பற்றி மட்டும் சொல்ல வில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முயன்றார். அதனை பாதியில் தடுத்து நிறுத்திய நிர்மலா சீதாராமன், இந்த கேள்வியை அப்புறம் கேளுங்க என்று சொல்லிவிட்டு, மீண்டும் மும்மொழிக் கொள்கை தொடர்பான கேள்வியை கேட்க வைத்து பதில் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.












Click it and Unblock the Notifications