டிடிவி தினகரன் மனித புனிதர் கிடையாது.. லஞ்சம் கொடுத்தார், கைதானார்: தமிழிசை தடாலடி
சென்னை: மனித புனிதரை கைது செய்யவில்லை, லஞ்சம் கொடுத்தவர்தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக அவரின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில் மனித புனிதரை கைது செய்யவில்லை. தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுத்தவரைத்தான் கைது செய்துள்ளார்கள். சட்டம் தனது கடமையை செய்துள்ளது. தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடத்திய அளவுக்கு லஞ்ச ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளது. எனவே தவறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினகரன், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்தது கையும் களவுமாக பிடிபட்டது. அதைப்போல தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதும் உறுதியாகியுள்ளது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications