ஈபிஎஸ், ஓபிஎஸ் எல்லாம் சிறு துரும்பு... இரட்டை இலை எங்களுக்கே - தினகரன்
சட்டவிதிப்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று டிடிவி தினகரன்நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஈபிஎஸ், ஓபிஎஸ் எல்லாம் சிறு துரும்புதான் என்றும் சட்ட விதிகளின் படி இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் தேர்தலின் போது ஓபிஎஸ், சசிகலா அணிகள் சின்னம், கட்சிக்காக முட்டி மோதியதால் அதிமுக சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. அதே நேரத்தில் டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு இரட்டை இலை சின்னம் கேட்டு முட்டி மோதுகிறார்.
இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் 7 முறை விசாரணை நடைபெற்றுள்ளது. இது குறித்த தீர்ப்பு எந்த சமயத்திலும் வெளியாகலாம். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சட்டவிதிப்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.
திருவானைக்காவலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 90 சதவிகித அதிமுகவினர் எங்களோடுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் சிறு துரும்புதான் என்று கூறிய அவர், இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.












Click it and Unblock the Notifications