தினகரன் எங்களை கூப்பிடலையே.. கிண்டலடிக்கும் ஓபிஎஸ்!
ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு தினகரன் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு டிடிவி தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணைந்துவிடும் என ஈபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக கதவு திறந்தே இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனும் இரு அணிகளும் இணைய வேண்டும் கட்சிப் பலப்பட வேண்டும் என்று கூறினார். அதற்காகவே ஆகஸ்ட் 5ஆம் தேதி கட்சி நிர்வாகிகளை தலைமை கழகத்திற்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு டிடிவி தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர்கள் யாரும் தன்னை அழைக்கவில்லை என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தங்களுக்கு அழைப்பு விடுக்காமல் எப்படி கட்சியை இணைக்கப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன், சசிகலா என மன்னார்குடி குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினால் தான் பேச்சுவார்த்தை என ஆரம்பத்தில் இருந்து கூறி வந்த ஓபிஎஸ் தற்போது தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கிண்டலாக கூறியுள்ளார்.
-
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications