எதிர்பார்த்தபடி அமைந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு – டி.டி.வி. தினகரன்
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், எதிர்பார்த்தபடியே அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்
சென்னை: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறி்க்கை, நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிசெய்த பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆட்சிசெய்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதாவும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதன் மூலம், தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சிசெய்த கட்சிகளின் அரசு நிர்வாகத்தை மனதில் வைத்தே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றாலும், மணிப்பூரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே மெல்லிய அறுதிப் பெரும்பான்மையோடு அதிகாரத்தை தக்கவைத்திருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கான அரசாக, மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு வழிகாட்டும் அரசாக நடத்தப்படுகிறபோது தான் ஆளுகிற இயக்கமே ஆட்சியை தக்க வைக்கும் அரசியல் புரட்சி நிகழ்கிறது என்பதை மனதில் கொண்டு, ஜெயலலிதா சூளுரைத்தது போல, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வே தமிழகத்தை ஆளும் என்கிற நன்நோக்கத்தையே இலக்காக முன்னெடுப்போம் என்றுரைத்து, இந்த சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் வெற்றிகளை ஈட்டியிருக்கும் பா.ஜ.க.வுக்கும், ஏறத்தாழ 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப்பில் அரியணை ஏறும் காங்கிரஸ் கட்சிக்கும், அதுபோலவே பா.ஜ.க.விடம் இருந்து கோவா மாநிலத்தை கைப்பற்றியதோடு, மணிப்பூரில் தங்களது ஆட்சியை தக்க வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அ.தி.மு.க. சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications