(தப்பித் தவறி) தினகரன் முதல்வரானால்.. மாரியப்பன் கென்னடிக்கு அமைச்சர் பதவி உறுதி!
சட்டசபையில் இன்று பேசிய மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி திராவிட தலைவன் டிடிவி தினகரன் என புகழாரம் சூட்டினார்.
சென்னை: சட்டசபையில் இன்று பேசிய மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, திராவிட தலைவன் டிடிவி தினகரன் என புகழாரம் சூட்டினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக தற்போது மூன்று அணிகளாக இயங்கி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி தரப்பு தினகரனுக்கு எதிராக திரும்பியதை தொடர்ந்து சசிகலா அணி தற்போது எடப்பாடி அணி தினகரன் அணி பிரிந்துள்ளது. எம்எல்ஏக்கள் பலர் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி இன்று பேசினார். அப்போது டிடிவி தினகரன் திராவிடத்தின் தலைவன் என புகழ்ந்து தள்ளினார்.
ஏற்கனவே கூவத்தூர் விடுதியில் எம்எல்எக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, அனைவரும் சுதந்திரமாக உள்ளதாக கூறினார். சுய விருப்பத்தின் பேரிலேயே அனைவரும் தங்கி உள்ளதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.