ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த டிடிவி.தினகரன் முயற்சி.. தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் அணி புகார்
தோல்வி பயம் காரணமாக தினகரன் அணியினர் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக ஓபிஎஸ் அணியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: தோல்வி பயம் காரணமாக தினகரன் அணியினர் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக ஓபிஎஸ் அணியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தேர்தலை நிறுத்துவதற்காக ஆர்.கே.நகரல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த தினகரன் அணி திட்டமிட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு புகார் தெரிவித்துள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் தரப்புக்கும் சசிகலாவின் டிடிவி.தினகரன் தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் லைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஓ.பி.எஸ். அணி எம்.பி. மைத்ரேயன் புகார் அளித்துள்ளார். அதில் ஆர்.கே.நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த தினகரன் அணியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தேர்தலை நிறுத்த சதி என தேர்தல் அதிகாரியிடம் மைத்ரேயன் மனு அளித்துள்ளார். மேலும் தோல்வி பயம் காரணமாக தினகரன் அணியினர் தேர்தலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications