திமுக - காங். கூட்டணிக்கு செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றது- சொல்வது யாருனு பாருங்க
திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றதாகும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கோவை: திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றதாகும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகரில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவுக்கு சென்ற டி.டி.வி தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது தன்னை ஜெயிக்க வைத்தால் ஓட்டுக்கு ரூ.10000 தருவதாக தினகரன் உறுதியளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கூட்டணி இல்லை
ஹவாலா முறையில் டிடிவி தினகரன் வாக்காளர்கள் பணம் விநியோகம் செய்வதாக வந்த புகார்கள் மக்கள் போராட்டத்தின் மூலம் நிரூபணமாகிவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது. இதுகுறித்து கோவையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நான் செல்லமாட்டேன்.

மனநலம் பாதிப்பு
திமுக- காங் கூட்டணிக்கு செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றதாகும். திவாகரன் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது.

மதுசூதனன் வேலை
ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது பணம் தருகிறோம் என்று எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரும் கூறவில்லை. ரூ.20 நோட்டை காட்டி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மதுசூதனன் செய்த வேலை. அவர்தான் அவரது அடியாட்களை செட்அப் செய்து இதுபோன்று ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்.

நல்ல தீர்ப்பு வரும்
இந்திய வரைப்படத்தில் இருந்து தமிழகத்தையே மத்திய அரசு நீக்கிவிட்டது. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications