விஷால் என் நண்பர்தான்.. ஆர்.கே.நகரில் நான் போட்டியிட சொல்லவில்லையே... தினகரன்
விஷால் என் நண்பர்தான், ஆனால் நான் சொல்லி அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: விஷால் என் நண்பர்தான், இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம். ஆனால் நான் சொல்லித்தான் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது தவறான கருத்து என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த தகவலை விஷால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து ஏராளமான யூகங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தினகரன் கூறுகையில், விஷால் உட்பட யார் போட்டியிட்டாலும் என் வெற்றியை பாதிக்காது.
'அம்மா' வேட்பாளராகிய எங்களது வெற்றி பாதிக்கப்படாது. ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்.
விஷால் என் நண்பர்தான். அவரிடம் அடிக்கடி போனில் பேசுவேன். ஆனால் நான் சொல்லி விஷால் போட்டியிடவில்லை. அவர் அறிவிப்பிற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications