இவர்களே தான் வாழனுமா.. தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏழுமலை சீற்றம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏழுமலை ஆட்சி போனாலும் பரவாயில்லை, கட்சி தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி : இவர்களே தான் வாழ வேண்டுமா, ஆட்சி செய்ய வேண்டுமா என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏழுமலை உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரின் பதவியை பறிக்க பரிந்துரைத்து அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகருடன் கடிதம் அளித்துள்ளதாகக் கூறினார். அதே வேளையில் தினகரன் ஆதரவு பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட் முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
எங்களுடைய விருப்பத்திற்கு நாங்கள் எங்கும் செல்லக் கூடாதோ. என்னுடைய வீட்டின் முன்பு 5 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், என்னுடைய குடும்பத்தாரை அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர், இது தான் ஈபிஎஸ் ஓபிஎஸ்ன் ஆட்சியா.

சாக வேண்டுமா?
நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 19 எம்எல்ஏக்களும் ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டின் முன் வந்து செத்து போய்விட்டால் சரியாகிவிடுமா. இவர்களே ஆட்சி செய்ய வேண்டுமா, இவர்களே வாழ வேண்டுமா வேறு யாரும் வரக் கூடாதா.

சேர்ந்து பாத்துக்கலாம்
தினகரன் என்ன சொல்கிறார் ஏழைகளுக்காக பாடுபடும் இந்த கட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தானே சொல்கிறார். துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் வந்து பேசுங்கள் ஒன்று சேருங்கள். கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

சசி சொல்வதை செய்வோம்
இன்று என்னடைய வீட்டின் முன் குண்டர்கள் அராஜகம் செய்தது போல நாளை மக்களுக்கும் நடக்கும் மக்களே நீங்கள் தான் இதற்கு ஒரு நியாயம் சொல்ல வேண்டும். 19 பேரின் பதவியை நீக்க உத்தரவிட்டுள்ளது குறித்து தினகரன், சசிகலா என்ன சொல்கிறார்களோ அதனையே செய்வோம்.
பதவி, ஆட்சி போனாலும் பரவாயில்லை எங்களுக்கு கட்சி தான் முக்கியம்.

தினகரன் அழைத்து செல்வார்.
ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்து தினகரன் வந்து எங்களை அழைத்து செல்வார். சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி எனவே அவருடன் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும், என்றும் ஏழுமலை கூறினார்.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு












Click it and Unblock the Notifications