செலவு அதிகரிப்பால் ரஷ்ய நிறுவன காண்டிராக்ட் ரத்து... ஸ்தம்பித்தது சென்னை மெட்ரோ ரயில் பணிகள்!
சென்னை: செலவு அதிகரிப்பு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும், அதன் ரஷ்ய காண்டிராக்டருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அண்ணா சாலையில் சுரங்கம் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கின்றன. இதனால் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய நிறுவனமான மாஸ்மெட்ரோஸ்டிராய் என்ற நிறுவனம் அண்ணா சாலையில் பாதாள சுரங்கப் பாதை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கான கட்டணத் தொகை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் செலவுத் தொகையும் அதிகரித்துள்ளது. எனவே கூடுதல் தொகை கேட்டு அந்த நிறுவனம் உரியவர்களுக்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அதிரிடியாக அந்த நிறுவனத்தின் காண்டிராக்டை ரத்து செய்து விட்டனர்.

கூடுதல் செலவு...
இதுகுறித்து மாஸ்மெட்ரோஸ்டிராய் நிறுவனத்தைச் சேர்ந்த அருண் சிங் என்பவர் கூறுகையில், "சுரங்கப் பாதை அமைக்கும் பணியின்போது திட்டமிட்டதை விட மண் கடினமாக இருந்ததாலும், சுரங்கப் பாதையின் ஆழத்தை திடீர் திடீரென மாற்ற வேண்டி நேரிட்டதாலும் கூடுதல் செலவீனம் ஏற்பட்டது.

சொன்ன பணம் தரவில்லை...
முதலில் இதை கூடுதல் செலவீனக் கணக்கி்ல் சேர்த்துக் கொள்வதாக மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதை நம்பி நாங்களும் கூடுதல் இயந்திரங்களை பெரும் பொருட் செலவில் வாங்கி பணியில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் கூறியபடி மெட்ரோ நிறுவனம் எங்களுக்குப் பணத்தைத் தரவில்லை" என்றார்.

தடுமாறும் நிலை...
மேலும் அவர் கூறுகையில், "செலவு அதிகரிப்பு, ஸ்டீல் விலை உயர்வு, சிமெண்ட் விலை உயர்வு, எரிபொருள், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஆகியவை காரணமாக நாங்கள் மிகவும் தடுமாறும் நிலை ஏற்பட்டது.

சிரமம்...
மேலும் சுரங்கப் பாதையில் ரயில் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காமான் இந்தியா நிறுவனம் திட்டமிட்ட காலத்தில் தனது பணிகளை முடிக்கவில்லை. இதனால் சுரங்கப் பாதை தோண்டுவதிலும் சிரமம் ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்தம்பித்தது...
இப்படி பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் அதிரடியாக ரஷ்ய நிறுவனத்தின் காண்டிராக்டை ரத்து செய்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம். இதனால் அண்ணா சாலைப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications