Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 40 லட்சம் மதிப்பிலான உரத்துடன் லாரி கடத்தல்.. அதிரடியாக மீட்ட போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான உரத்துடன் கடத்தப்பட்ட லாரியை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். லாரியை கடத்தி சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் செவக்காட்டு படடியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் இரவு தூத்துக்குடி தெர்மல்நகரில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து 22 டன் எடையுள்ள உர மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு ஈரோடு புறப்பட்டார்.

இரவு 9 மணிக்கு மதுரை பை பாஸ் சாலையில் உள்ள லாரி ஏஜென்சி முன்பு அட்வான்ஸ் தொகையை வாங்குவதற்காக லாரியை விட்டு விட்டு உள்ளே சென்றார். திருமபி வந்த பார்த்தபோது லாரியை காணவில்லை.

யாரோ அதனை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து சந்திரசேகர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் எஸ்பி ஆஸ்வின் கோட்னீஷ் மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படு்த்தினார்.

இந்த நிலையில் பசுவந்தனை எஸ்.ஐ பொன் முனியசாமி மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் கோவில்பட்டி செல்லும் சாலையில் இரவு 9.50 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக உரமூட்டையுடன் வந்த லாரியை மடக்கி பிடித்தனர்.

22 டன் உர மூட்டையை கடத்தி சென்று சாயர்புரம் அருகே உள்ள சுந்தர்ராஜ் நகர் நாரயணன் மகன் கருப்பசாமி, இடையார்காடு பகுதியை சேர்ந்த குட்டிகுமார் மகன் சிவபாலன் ஆகிய இருவரையும் கைது செய்து லாரியை உரத்துடன் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட உடனேயே போலீசார் உஷார் அடைந்ததால் அதிரடியாக மீட்க முடிந்ததாக கூறப்படுகிறது. லாரியை மடக்கி பிடித்த போலீசாரை எஸ்பி அஸ்வின் கோட்னீஷ் பாராட்டினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+