For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்த சபர்ணா... கொலையா? தற்கொலையா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆலப்பாக்கத்தில் இளம் நடிகை சபர்ணா ஆனந்த் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கையை அறுத்து தற்கொலை செய்த சபர்ணா உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. சபர்ணாவின் மறைவு, சின்னத்திரை உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சபர்ணா, கோவை அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. சைக்காலஜி படித்தவர். சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துள்ள சபர்ணா, பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை, மதுரவாயலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வரவே, அருகிலுள்ளவர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பிரிந்த ஆண் நண்பர்

பிரிந்த ஆண் நண்பர்

சென்னையில் தனது ஆண் நண்பருடன் லிவிங் டு கெதரில் இருந்ததாகவும், ஆண் நண்பர் தன்னை விட்டுப் பிரிந்த விரக்தியில் சபர்ணா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சபர்ணா

சடலமாக மீட்கப்பட்ட சபர்ணா

போலீசார் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார் சபர்ணா. அவர் உடல் ஆடையின்றி நிர்வாண நிலையில் இருந்ததாகவும், கை அறுக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், அவர் எழுதிய கடிதத்தைப் போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோகத்தில் சபர்ணா

சோகத்தில் சபர்ணா

சபர்ணாவின் சமீபத்திய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அனைத்தும் பிரிவை மையப்படுத்தியதாகவும், அன்புக்கு ஏங்குபவையாவுமே இருக்கின்றன. மேலும், தன் ஆண் நண்பருடன் இருந்த புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் இருந்து அவர் நீக்கியுள்ளார்.

அதிர்ச்சியில் தோழிகள்

அதிர்ச்சியில் தோழிகள்

சபர்ணாவின் உடல் நிர்வாண நிலையில் கிடந்ததால் கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபர்ணாவின் மரணம் அவரது நண்பர்களையும், உறவினர்களையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சபர்ணா உடன் நடித்த சில தோழிகள் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர்.

தைரியசாலி பெண்

தைரியசாலி பெண்

சபர்ணா மிகவும் தைரியமான பெண். ஆனால் அவளுக்கு பெர்சனலாக நிறைய பிரச்சினைகள் இருந்தன. நண்பர்கள், உறவினர்களிடம் அதிகம் பாசத்துடன் பழகுவாள் என்றும் கூறினர். ஆனால் சபர்ணா இது போல ஒரு முடிவு எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். உளவியல் படித்தவரே இந்த முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

English summary
TV actress Sabarna who was seen in popular Tamil serials like ‘SondaBandam' and ‘Pasamalar' was found dead at her house in Chennai.Her death has shaken the whole Tamil entertainment industry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X