காவிரி வாரியத்திற்காக ஏப்ரல் 29ல் மெரினாவில் போராட்டம்... வேல்முருகன் எச்சரிக்கை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 29ம் தேதி மெரினாவில் உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஏப்ரல் 29ல் மெரினாவில் உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். போலீசார் அனுமதி மறுத்தாலும் அமைதி வழியில் போராட்டம் நடக்கும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உரிமையாம் காவிரி நீரைப் பெற காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் நீண்ட காலங்களாக போராடி வருகின்றனர். பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 6 வார காலக்கெடுவை மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் ஸ்கீம் என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி அதற்கு அர்த்தம் புரியவில்லை என்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததோடு, விளக்கம் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து மே மாதம் வரை காலக்கெடுவை நீட்டிப்பு செய்துவிட்டது.
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாக பார்க்கப்படும் மத்திய அரசின் அணுகுமுறைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், இளைஞர்கள் என்று பலரும் காவிரி உரிமைக்காக வீதிக்கு வந்த போராடினர்.
காவிரி உரிமைக்கான போராட்டங்கள் நடக்கும் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கக் கூடாது என்று நடத்தப்பட்ட மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் காரணமாக ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பபு போராட்டங்களை முதன்முதலில் அறிவித்தவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 29ல் சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். உழைப்பாளர் சிலை முன்பு இந்த போராட்டத்தை நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரப்படும்.
ஒருவேளை போலீசார் அனுமதி மறுக்கும் பட்சத்தில் அமைதியான வழியில் இந்த போராட்டம் நடக்கும் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ, மே 17 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications