வைகோவின் சிகரெட் ஆதரவு கருத்து... வளைத்து ஆடும் வலைஞர்கள்
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. ஆனா, புகை பிடிச்சவன் பலாத்காரம் செய்கிறதில்லை. புகை பிடிக்கறவன் போய் பெண்கள் கையை பிடித்து இழுக்கிறதில்லை. புகை பிடிச்சதுனால ஒருவனைப் போய்
கை, காலை வெட்டுறதில்லை. புகை பிடிச்சதுனால பெத்த தாயை பலாத்காரம் செய்யப்போவதில்லை.
புகை பிடிக்கிறதால சமுதாயம் அடியோடு நாசமாகுறதில்லை. இதுதான் உண்மை நிலைமை என்பது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாதம்.
இதற்கு டுவிட்டரில் தங்களின் பாணியில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.
|
உயிர்நீத்த இளைஞர்கள்
வைகோவின் சமீபத்திய ஸ்டேட்மெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருவதை காட்டுகிறது இந்த பதிவு
|
நான் நிறுத்தறேன்
முழு மதுவிலக்கு அமல்படுத்தினால் சிகரெட் கம்பெனி நிறுத்தப்படும் என்ற வைகோவின் கருத்துக்கு இந்த கமெண்ட்.
|
என்ன கைய புடிச்சு இழுத்தியா
சிகரட் புடிக்கிறவன் பொண்ணுங்க கைய புடிச்சு இழுக்குறதுல கற்பழிக்கிறதில்லைன்னு அடிச்சார் பாரு அந்தர் பல்டி அங்க தான் பாவா பன்ச்சர் ஆனாரு.
|
அவமானமில்லையா
உடல்நலம் சரியில்லை என்று ஜெயலலிதா நாடகமாடுவதாக கூறியுள்ள வைகோவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஒரு வலைஞர்.
|
இதுல என்ன பெருமை
சிகரெட் பற்றி வைகோ சொன்ன கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
எல்லாம் ஓட்டுக்காக
மோடிக்கு விருந்து வைத்த ஜெயலலிதா நலமாக இருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் கலாமிற்கு அஞ்சலி செலுத்த போகலையே என்று வைகோ கூறியுள்ளதை வைத்து கமெண்ட் அடித்துள்ளனர்.