கரூரில் நின்ற கார் மீதி மற்றொரு கார் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்
கரூர்: கரூர் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயெ 3 பேர் பலியானதுடன், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மதுரையிலிருந்து மகேந்திரன்,செல்லாண்டி,செல்வம் உள்ளிட்ட 8பேர் கரூர் அருகேயுள்ள மணவாடி ஆடு சந்தையில் ஆடு வாங்குவதற்காக காரில் வந்து கொண்டிந்தனர்.

அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தகரக்கொட்டகை என்ற இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கினர்.

அச்சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் முன்னால் நின்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியதில் வெளியில் நின்று கொண்டிருந்த மகேந்திரன்,செல்லாண்டி,செல்வம் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் காரில் உள்ளே இருந்த மூன்று பேரும்,பின்னால் வந்த காரின் ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் உள்ளிட்ட 5 பேர் படுகாயத்துடன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications