ரயில் மீது வந்து மோதிய மயில்.. 2 பேர் காயம்.. ஈரோடு அருகே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே வந்து கொண்டிருந்த ஜனசதாப்தி விரைவு ரயில் என்ஜின் கண்ணாடி மீது மயில் ஒன்று படு வேகமாக மோதி உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தி தாக்கியதில் இரண்டு பயிற்சி என்ஜின் டிரைவர்கள் காயமடைந்தனர்.

தினமும் கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி அதிவேக விரைவு ரயில் வண்டி செல்வது வழக்கம். இன்றும் வழக்கம் போல வந்து கொண்டிருந்த போது ஈரோடு மாவட்டம் பாசூர் ரயில் நிலையத்தை கடந்த போது எதிர்பாராத விதமாக மயில் ஒன்று திடீரென பறந்து வந்து ரயில் என்ஜின் முன்பகுதி கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே பாய்ந்தது.

Two engine drivers injured as peacock attacks them

உள்ளே வந்து விழுந்த மயில், பயிற்சி ஓட்டுனர்களான ரெங்கராஜன், கார்த்திக் ஆகியோரைத் தாக்கியது. இருவரையும் தலையிலும், உடம்பிலும் கொத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் இருவரையும் கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Two engine drivers injured as peacock attacks them

இந்த சம்பவம் காரணமாக 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்ற ரயில் திருச்சிக்கு 40 நிமிடம் தாமதமாக சென்றது. அதிர்ஷ்டவசமாக என்ஜின் டிரைவர் சாதுரியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+