பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் 2 விவசாயிகள் சுருண்டு விழுந்து மரணம்.. நாகையில் அடுத்தடுத்து சோகம்
பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் 2 விவசாயிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். நாகையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடந்து வருவதால் கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.
நாகப்பட்டினம்: பயிர்கள் கருகிய சோகத்தில் அடுத்தடுத்து 2 விவசாயிகள் நாகையில் மரணம் அடைந்துள்ளதால் நாகை மாவட்டத்தில் பெரும் சோகம் நிலவி வருகிறது. பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், விவசாயிகளின் மரணம் தொடர்ந்து வருவது அனைவரையும் வேதனை அடையச் செய்திருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது மருதூர். இங்கு வசித்து வந்தவர் வேதய்யன். இவர் குத்தகை எடுத்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்திருந்தார். வறட்சியின் காரணமாக பயிர்கள் காய்ந்து கருகியதைக் கண்டு கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார் வேதய்யன். இந்நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர் காத்தய்யன். 65 வயதான இவர் வாய்மேட்டை சேர்ந்த விவசாயி. 2 ஏக்கரில் பயிர் சாகுபடி செய்திருந்த இவர், பயிர் கருகிய அதிர்ச்சியில் இன்று மரணம் அடைந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அடுத்தடுத்து 2 விவசாயிகள் உயிரிழிந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் விவசாயிகள் மரணங்கள், உறவினர்களின் கதறல்களும் தமிழக அரசுக்கு மட்டும் எட்டாமலேயே உள்ளது. விவசாயிகளின் மரணத்தை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications