வேலூரில் 2 பிரிவினருக்கிடையே மோதல் – 1000 பேர் வெளியேற்றம்; போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டம் வெண்பாக்கம் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையிலான மோதலில் 1000 பேருக்கு மேல் கிராமத்தை விட்டு வெளியேறினர். கலவரத்தை தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காவேரிப்பாக்கம் அடுத்த மேல் வெண்பாக்கத்தில் நேற்று இரவு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்ப்பட்டது. இதில் பல்வேறு வீடுகளிலிருந்த பொருட்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து கலவரக்காரர்களில் ஒரு தரப்பினரில் கிட்டத்தட்ட 1000 பேர் கிராமத்தை விட்டு வெளியேறினர். மேலும் கலவரத்தை தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications