இரண்டு போலீஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காவல்துறை உளவுப்பிரிவுக்கு (எஸ்.பி.சி.ஐ.டி.) புதிய எஸ்.பி.யாக டி. கண்ணனை நியமித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வவர்மா சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டி. கண்ணன் சிறப்பு உளவுப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல விருதுநகர் காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications