புதுச்சேரி: நள்ளிரவில் ரவுடிகள் வெட்டிக்கொலை கொலை பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் நேற்றிரவு ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் மது அருந்திய நண்பரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி தினேஷ். இவர் தனது நண்பர் ராஜேஷுடன், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள படகு கம்பெனி அருகே நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, தினேஷை சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தின்போது மர்ம கும்பலிடம் இருந்து தினேஷை காப்பாற்ற முயன்ற ராஜேஷையும் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், முன் விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கூறினார்கள்.
புதுச்சேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications