ஒரே ஒரு வாக்குசாவடியில் இரண்டே இரண்டு வாக்குகளாம்
வேலூர்: அரக்கோணம் அருகே உள்ள உரியூர்குப்பத்தில் இருந்த வாக்குச்சாவடி 2 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
வேலூர் மாவட்டம் உரியூர் பகுதியில் இதுவரை அமைக்கப்பட்டு வந்த வாக்குச்சாவடி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உரியூர் குப்பம் கபகுதியில் அமைக்கப்பட்டது.
இதற்கு உரியூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஆயினும் தேர்தல் அதிகாரிகள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் உரியூர் பகுதியை சேர்ந்த 321 வாக்காளர்களில் 2பேர் மட்டுமே வாக்களித்தனர்.
மீதமுள்ள 319 பேர் வாக்குச்சாவடி இடம் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்க மறுத்துவிட்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அரக்கோணம் தாசில்தார் மீனாட்சி பெருமாள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உரியூர் பகுதி வாக்காளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் உரியூர் பகுதி வாக்காளர்கள் வாக்களிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறி விட்டனர்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் 2 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.












Click it and Unblock the Notifications