சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை.. மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்
மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கொலையானவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்க துரை ஆகிய மூன்று பேரும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அளவில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தட்டிக்கேட்டுள்ளான். அப்போது மூன்று பேரும் சிறுவனை தாக்கியுள்ளனர். சிறுவனை தாக்கியது ஏன் என்று கேட்பதற்காக ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் நேற்று மாலை சென்றுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதை ஊர்க்காரர்கள் தடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு மேற்கூறிய மூன்று பேரும் கல்லூரி மாணவர் ஹரிசக்தி மற்றும் ஹரிஷை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கல்லூரி மாணவரும், இளைஞரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரதே பரிசோதனை அறிக்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர் மற்றும் இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய குற்றவாளியான மூவேந்தனை போலீசார் தேடி வருகிறார்கள். சாராய விற்பனையில் ஈடுபட்ட மேலும் சிலரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications