தமிழகமெங்கும் மக்களை சந்திக்கப்போவதாக உதயகுமார் அறிவிப்பு

அணு உலைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. புதுச்சேரியிலும் இதன் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடந்தது.
இந்நிலையில், இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் 779 வது நாளான நேற்று, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தங்கள் அடுத்தக்கட்ட பணிகளை பற்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இடிந்தகரை போராட்ட பந்தலில் மக்களிடையே பேசிய சுப.உதயகுமார், "நமது போராட்டதின் வலிமையான ஒரு கிராமமாக இருந்த கூத்தங்குளிக்குள் காவல்துறை தாது மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக புகுந்துள்ளது.இது கூத்தங்குளிக்கான பின்னடைவு மட்டுமல்ல ஒட்டுமொத்த கடலோர சமுதாயத்துக்கான பின்னடைவு.
ஆதலால் நம்முடைய போராட்டத்தை பற்றி முக்கியமான முடிவெடுக்க வேண்டியுள்ளது. அணு உலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். கூடங்குளம் மட்டுமல்ல இந்தியாவில் இனி எங்குமே அணு உலை என்பதை வரக்கூடாது. மக்கள் அடர்த்தியாக உள்ள இந்தியாவில் அணுசக்தி என்பது அபாயமானது.
இனி இடிந்தகரையை விட்டு தமிழகமெங்கும் சென்று மக்களை சந்திக்கிறோம்.முதல் கட்டமாக மீனவர் மக்களுக்கு எல்லாம் மிகப்பெரிய வெகுமதிகளை அளிக்கின்ற மீனவ மக்கள் கொல்லப்படுவதை சிறைப்பிடிக்கப்படுவதை பற்றி கடிதம் எழுதுகின்ற தமிழக முதல்வரை நேரில் சந்திக்கிறோம்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் முதல்வரைதான் சந்தித்து நமது குறைகளை சொல்ல முடியும், நம்மை காக்க வேண்டியது அவரது கடமை.
இதனால் என்ன நடந்தாலும் சரி அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். சென்றால் சென்னை கோட்டை அல்லது சிறைச்சாலை. நமக்கு துரோகம் செய்கிறவர்களின் பாவத்துக்கு எல்லாம் சேர்த்து தான் நாம் போராடுகிறோம்; நாம் போராட்டத்தை கைவிடவில்லை மாற்றி அமைக்கிறோம்" எணக் கூற மக்களிடையே பெரும் சலசலப்பு.
இதை தொடர்ந்து மற்ற முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications