லோக்சபா தேர்தலில் போட்டி- நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது கூடங்குளம் போராட்டக் குழு
இடிந்தகரை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை கூடங்குளம் போராட்டக் குழுவினர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடலோர மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அவர்கள் தீவிரத் தேர்தல் களத்தில் குதிக்கின்றனர்.

ஆம் ஆத்மியுடன் இவர்கள் கை கோர்த்து களம் இறங்குகின்றனர். இந்த அமைப்பின் உதயக்குமாரன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவுார் என்று தெரிகிறது.
அரசியலில் இறங்குவதற்கு வசதியாக மகளிர் அணியிடம் தங்களது போராட்டம் மாற்றப்பட்டுள்ளதாக உதயக்குமாரன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார் உதயக்குமாரன்
மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது, அரசியல் திட்டங்கள், பிரசார விவரம், போட்டியிடும் விவரம் உள்ளிட்டவை குறித்து விளக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications