கபடிப் போட்டியில் பங்கேற்ற மாணவி மயங்கி விழுந்து பலி- திருப்பூரில் விபரீதம்!
உடுமலை: திருப்பூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தனியார் கல்லூரியில் கடந்த 20 ஆம் தேதி முதல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜூனியர் பிரிவு மாணவிகளுக்கான கபடி போட்டி தொடங்கியது.
இரண்டு அணிகள்:
இந்த போட்டியில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மாணவிகள் அணியினரும், கொழுமம் தனியார் பள்ளி அணியினரும் விளையாடினர்.
மயக்கமடைந்த மாணவி:
அரசு மேல்நிலைப்பள்ளி அணியில் 8 ஆம் வகுப்பு மாணவி தீபா எதிரணி பகுதிக்குள் பாடிச் செல்லும் முன் மயக்கமடைந்தார்.
இறந்து போன தீபா
அதிர்ச்சியடைந்த குறுமைய விளையாட்டுப்போட்டி அமைப்பாளர்கள் தீபாவை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கதறிய பெற்றோர்:
அதிர்ச்சியடைந்த போட்டி அமைப்பாளர்கள் இது குறித்து தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெற்றோர் மருத்துவமனையில் மகளின் உடலை பார்த்து கதறிதுடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
சகமாணவிகள் சோகம்:
சகமாணவிகள் மருத்துவமனையின் முன் சோகத்துடன் குவிந்தனர். தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கரோலின், கோட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை:
அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications