தமிழகத்தில் அனைவருக்கும் மார்ச் மாதத்திற்குள் ஆதார் அட்டை! ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: தமிழகத்தில், அனைவருக்கும் மார்ச் மாதம் இறுதிக்குள், ஆதார் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர்களுக்கு, ஆதார் அடையாள அட்டை கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு, விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக, 6.74 கோடி பேர் உள்ளனர். இவர்களில், 5.01 கோடி பேரிடம், தகவல் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்கள், புகைப்படம் எடுக்க தவறியவர்கள், பிழையான தகவல்களை சமர்பித்ததற்காக, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிக்க, மாவட்டம் தோறும், நிரந்தர மையம் ஏற்படுத்தப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், ஆதார் அடையாள அட்டை கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசித்தனர். அப்போது, மார்ச், 31ம் தேதிக்குள், அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்க, நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டனர். நேற்று, 16 மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடந்தது. மீதமுள்ள மாவட்ட கலெக்டர்களுடன், இன்று ஆலோசனை நடக்கிறது.












Click it and Unblock the Notifications