ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் லண்டன் பிரிட்ஜ் ஹாஸ்பிடல் மருத்துவர் ரிச்சர்ட்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே வருகை தந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு மருத்துவர் ரிச்சர்ட் தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருகிறார்.
ஜெயலலிதா 2 வாரங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா உள்ளிட்டோரைத் தவிர வேறு எவரும் சந்திக்கவில்லை. இதனால் தேவையற்ற வதந்திகள் கிளம்பின.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெளிவாக விளக்கம் தர வேண்டும். அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே நேற்று சென்னை வருகை தந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். அவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருப்பார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேவையான சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் அப்பல்லோவுக்கு வருகை தந்த புகைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications