பேருந்து கட்டண உயர்வு சரியானதே... அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு
பேருந்து கட்டண உயர்வு சரியானதே என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஓசூர்: பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த நடவடிக்கை சரியானதே என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
66 சதவீத கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் எம்எல்ஏக்களின் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டியதுதானே என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசை கண்டித்து ஜனவரி 24-ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் பேருந்து கட்டண உயர்வு சரியானதே. போக்குவரத்து துறை நலிவடைந்துள்ளது
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்சினை தீர்க்கப்படும் என்றார் அவர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழிசை கோரும் நிலையில் தமிழக அரசுக்கு பொன்னார் ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.