பாதிப்பு நேரத்தில் எந்த அரசையும் குறை சொல்லக் கூடாது... பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
புயல் பாதிப்பு நேரத்தில் எந்த அரசையும் குறை சொல்லக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவில் : புயல் பாதித்துள்ள நேரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும் எந்த அரசு நடந்தாலும் பாதிப்பு நேரத்தில் குறை சொல்லக் கூடாது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பேரழிவை சந்தித்து உள்ளது, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் அடைந்து இருக்கும் மீனவர்களுக்கு மத்திய துறை அதிகாரிகள் மூலமாக உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, குமரிமாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த கடலை பற்றி நன்கு தெரிந்த 25 மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு கப்பல் மூலமாக ஆழ்கடல் தீவுகளிலும் மீனவர்களை தேட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

குமரியில் நடந்து வரும் மீனவர் போராட்டம் அவர்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது, மாநில அரசு கேட்கும் உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது, புயல் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நேரத்தில் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எந்த அரசு நடந்தாலும் பாதிப்பு நேரத்தில் குற்றம் சொல்ல கூடாது.
3117 மீனவர்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவை போன்று நிவாரணம் வழங்க வேண்டும், 150 ரூபாய் 200 ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்களுக்கு அரசு 3 ரூபாய் 7 ரூபாய் என நிவாரணம் கொடுப்பது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல், விவசாயம் செய்யப்பட்ட பொருள் அறுவடை நேரத்தில் கிடைக்கும் பணத்தை நினைவில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications