பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை ஆலோசனை
தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து அனைத்து ஆளுநர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தமிழக மாவட்டங்களும் சென்று தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மாவட்டங்களின் வளர்ச்சிப்பணி மற்றும் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி ஊழல் புகாரில் சிக்கினார். பல்கலைக்கழகப் பணி நியமனங்களில் முறைகேடு செய்திருப்பதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தை நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டியுள்ளார். இதில் மருத்துவ, வேளாண், கால்நடை, பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில மாதங்களாகவே துணைவேந்தர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த பின்னரே, இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications