நெல்லையில் நடுரோட்டில் அண்ணன், தங்கையை வெட்டிக் கொல்ல முயன்ற மர்மகும்பல்!
நெல்லை: நெல்லையில் நடுரோட்டில் ஒரு மர்மக்கும்பல் அண்ணன், தங்கையை வெட்டிக்கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் நடராஜர்புரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம்.இவரது தங்கை பால்கனி, இருவரும் கட்டிட தொழிலாளிகள். இன்று காலை இருவரும் மேலப்பாளையம் பெரிய தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் வந்தனர்.
கையில் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் திடீரென சங்கரலிங்கத்தை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டினர். அவர்களை தடுத்த பால்கனியையும் சரமாரி வெட்டினர். இதில் 2 பேரது உடலிலும் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications