Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி: கப்பலில் ஆயுதங்கள்- கூடுதல் தகவல் தர மாலுமிகள் மறுப்பு! விரைவில் கைது?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பரப்பில் சிக்கிய அமெரிக்க தனியார் நிறுவன பாதுகாப்பு கப்பலில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் அது குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க அதன் மாலுமிகள் தொடர்ந்து மறுத்து அடம் பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்திருக்கு சொந்தமானது சீ மேன் கார்டு ஓஹியோ என்ற பெயருள்ள கப்பல். சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டு கடல் கொள்ளையர்களிடமிருந்து கடலில் சரக்குகளை ஏற்றிசெல்லும் கப்பலை பாதுகாப்பாக அந்தந்த துறைமுகங்களுக்கு கொண்டு செல்வது இவர்களது பணி.

10 மாலுமிகள் மற்றும் 25 கடல் பாதுகாவலர்களைக் உள்ளடக்கிய இந்த கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததால் சனிக்கிழமையன்று சந்தேகத்தின் பேரில் இந்த கப்பலை தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வந்தனர்.

துருவி துருவி விசாரணை

துருவி துருவி விசாரணை

பல்வேறு துறை அதிகாரிகளுடன் கப்பலில் மேற்கொண்ட சோதனையில் இந்த கப்பலில் உள்ள துப்பாக்கிகள் அனைத்தும் சர்வதேச உரிமம் பெற்றது என தெரியவந்துள்ளது.

முதலில் ஆயுதம் இல்லை என தகவல்

முதலில் ஆயுதம் இல்லை என தகவல்

மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ, வெடிமருந்தோ, ஆயுதங்களோ இந்த கப்பலில் இல்லை என்று சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இப்போது ஆயுதங்கள் இருப்பதாக தகவல்

இப்போது ஆயுதங்கள் இருப்பதாக தகவல்

தற்போது கப்பலில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவைகள் பதுக்கி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளன.

மாலுமிகள் அடம்

மாலுமிகள் அடம்

கப்பல் பிடிப்பட்டு 3 நாட்களாகியும் கப்பல் நிறுவனத்தின் தரப்பிலிருந்து சரியான தகவல்கள் தெரிவிக்க மாலுமிகள் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடுக்கடலில் டீசல் பிடிப்பு

நடுக்கடலில் டீசல் பிடிப்பு

மேலும் கப்பல் சர்வதேச விதிமுறைகளை மீறி நடுக்கடலில் டீசல் பிடித்துள்ளதகவும் கூறப்படுகிறது.

35 பேர் மீது வழக்கு

35 பேர் மீது வழக்கு

இந்திய கடல் பகுதிக்குள் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கப்பலில் வந்த ஊழியர்கள் உட்பட 35 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

விரைவில் கைது?

விரைவில் கைது?

இந்த வழக்கை அடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கைது நடவடிக்கைகளும் இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+