கந்து வட்டிக் கொடுமையா.. தைரியமா புகார் கொடுங்க.. மக்களுக்கு முதல்வர் உத்தரவு

கந்து வட்டி தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்துவட்டி தொடர்பான புகார்களை உடனுக்குடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் காசிதர்மத்தில் இசக்கி முத்து- சுப்புலட்சுமி தம்பதி, கந்து வட்டி கொடுமையால் தனது இரு குழந்தைகளுடன் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார்.

Usury Interest: CM orders Collectors and Police to take action

இதில் சுப்புலட்சுமியும், இரு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். இசக்கி முத்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இந்நிலையில் கந்து வட்டி தொடர்பாக ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கந்து வட்டி தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003-இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் காவல் துறையையும் ஆட்சியரையும் அணுகி நிவாரணம் பெறலாம்.

கந்து வட்டி வசூலிப்பவர்களிடம் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வட்டிக்கு பணம் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற பணத்தை நீதிமன்றம் மூலம் செலுத்தலாம். மேலும் சட்டத்துக்கு புறம்பான வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடமிருந்து பெறப்பட்ட சொத்துகள் மீட்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+