இடைத்தேர்தலுக்கு இரண்டு போலீஸ் பார்வையாளர்கள் நியமனம்: சந்தீப்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு முதன் முறையாக இரண்டு போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ''மேகாலயாவைச் சார்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி வினோத்குமார் போலீஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சார்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பல்கார் சிங் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கூறினார். தேர்தல் விதிமீறல்கள் குறித்து 1950 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்'' என்று சந்தீப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications