For Daily Alerts
Just In
அவரு தான் காமெடியன் ஆச்சே பாஸ்... வடிவேலு குறித்து சரத்குமார் கருத்து
சென்னை: விஷால் தாக்கப்பட்டதாக வடிவேலு கூறியிருந்தது குறித்து கேட்கப்பட்ட போது, அவர் தான் காமெடியன் ஆயிற்றே என கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திடீரென மதியம் சலசலப்பு ஏற்பட்டது. விஷால் அணியினருக்கும், சரத்குமார் அணியினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அதில், விஷால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
நடிகர் அல்லாத ஒருவர் தன்னைத் தாக்க முற்பட்டதாக விஷால் பேட்டியளித்தார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை சரத்குமார் மறுத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அவர் விளக்கமளித்தார்.
அப்போது, விஷால் தாக்கப்பட்டதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளாரே என சரத்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சரத்குமார், ‘அவர் தான் காமெடியன் ஆச்சே பாஸ்' என நகைச்சுவையாக பதிலளித்தார்.
Comments
English summary
Actor Sarathkumar has said that he can't take Vadivelu's words as he a comedian
Story first published: Sunday, October 18, 2015, 16:24 [IST]