ஒபாமா உருவபொம்மை எரிப்பு: அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை - வைகோ உள்பட 1000 பேர் கைது
சென்னை: அமெரிக்க அதிபர் ஒபாமா, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரின் உருவபொம்மையை எரித்து அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழர் படுகொலையில் நீதியை அழிக்க உள்நாட்டு விசாரணை என துரோகம் செய்யும் அமெரிக்காவை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ம.தி.மு.க., மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்த போராட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கோவை ராமகிருஷ்ணன், சத்திரியன் வேணுகோபால், மணிமாறன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உருவபொம்மை எரிப்பு
போராட்டத்தில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

வைகோ கைது
அங்கிருந்து முற்றுகை போராட்டத்துக்கு சென்ற வைகோ உள்பட அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

சர்வதேச நீதி விசாரணை
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 2009-ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த போராட்டத்தின் மூலம் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

முழுமையான ஆதரவு
ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் தீர்மானமாக கொண்டு வந்ததை அமுல்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளும் இலங்கை இனப்படுகொலை விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications