ஆமாம்..என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்... அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வைகோ பதில்
நெல்லை: தன்னுடைய மகன் வையாபுரி புகையிலை கம்பெனி ஏஜென்சி எடுத்து நடத்தி வருவது உண்மை தான் என்றும், தமிழக அரசு சிகரெட்டை தடை செய்தால் அவரது கம்பெனியும் மூடப்படும் எனவும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பதிலளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இன்று நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு சென்றார். அங்கு வைகோவின் தாயார் மாரியம்மாள், நல்லகண்ணுவுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் கலிங்கப்பட்டியில் நடந்த மதுக்கடை போராட்டத்தில் காயம் அடைந்த வைகோவின் தம்பி ரவிச்சந்திரனை சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.
தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது...
அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்கள் புகையிலை கம்பெனி நடத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் எனது மகன் பெயரில் புகையிலை கம்பெனி ஏஜென்சி நடத்தப்பட்டு
வருகிறது. அந்த கம்பெனியின் பங்குதாரராக நான் இல்லை.
எனது மகன்தான் அதில் உள்ளார். நான் பினாமி பெயரில் தொழில் செய்யவில்லை. தமிழக அரசு சிகரெட்டை தடை செய்தால் உடனே எனது மகன் நடத்தி
வரும் புகையிலை கம்பெனியை மூடி விடுவோம்.
மது ஒழிப்புக்கு ஆதரவாக நடந்து வரும் மாணவர் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்கியது தவறு. தற்போது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி காந்திய
வழியில் போராடி வருகிறோம். தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்காத நிலையில் இன்று நடைபெற்ற போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட மறுத்தால் பகத்சிங் வழியில்
போராடுவோம்.இவ்வாறு வைகோ கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசியதாவது..
தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மாதம் ரூ.30 ஆயிரம் கோடி அரசுக்கு மதுக்கடைகள் மூலம் வருமானம் கிடைக்கிறது. இந்த பணம் ஏழை மக்கள் மூலம் அரசுக்கு கிடைக்கிறது.
எனவே, ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உடனே டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவுக்கு எதிராக போராடிய வைகோ மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு நல்லக்கண்ணு கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications