சாப்பிடக் கூட விடாமல் கைதி போல் நடத்தினர்.. மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய வைகோ வேதனை!
சாப்பிடக் கூட அனுமதி அளிக்காமல் மலேசிய விமான நிலையத்தில் தம்மை கைதி போல் நடத்தியதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சாப்பிடக் கூட அனுமதி அளிக்காமல் மலேசிய விமான நிலையத்தில் தம்மை கைதி போல் நடத்தியதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அரசின் அழுத்தத்தினால் தான் மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த மலேசிய அரசு அவரை இன்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்திற்காக மலேசியா சென்றேன். விமான நிலையத்தில் என்னை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது. எனவே மலேசியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.
அவர்களிடம் திருமண பத்திரிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்தபோதும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து வைத்து கொண்டு சாப்பிடக் கூட அனுமதி அளிக்காமல் விமான நிலையத்திலேயே 16 மணி நேரம் கைதி போல் நடத்தினர். 24 மணிநேரமாக உணவு எதுவும் உட்கொள்ளவில்லை. இலங்கை அரசின் அழுத்தத்தினால் தான் எனக்கு மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டது. புலிகள் ஆதரவு குரல் எங்கும் ஒலிக்கக் கூடாது என இலங்கை அரசு நினைக்கிறது.
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். எனக்கு ஆதரவளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications