சென்னை ஐஐடியில் சமஸ்கிருதம் திணிப்பு: வைகோ கண்டனம்
சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார். அத்துடன் அதற்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசிய கீதம்
இந்த விழாவில் இறைவணக்கமாக தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்திலான கணபதி பாடல் இசைக்கப்பட்டது. வழக்கமாக மத்திய அரசு அலுவலகங்களில் இறை வணக்கத்துக்கு பதிலாக தேதிய கீதம்தான் இசைக்கப்படும்.

தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்
ஆனால் இந்த விழாவில் வேண்டுமென்றே சமஸ்கிருத பாடல் திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், சென்னை ஐஐடியில் சமஸ்கிருதம் பாடல் இசைக்கப்பட்டது தவறு.

நடவடிக்கை தேவை
இந்த பாடலை ஒலிபரப்ப காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிமுக சார்பில் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.

எந்த சம்பந்தமும் இல்லை
இதுகுறித்து ஐஐடி கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், விழாக்களின் போது எந்த பாடலை இறைவணக்கமாக ஒலிபரப்புவது என்பதை மாணவர்கள்தான் முடிவெடுப்பர். இந்த சமஸ்கிருதத்திலாலான கணபதி பாடலையும் அவர்கள்தான் ஒலிபரப்பினர். இதில் அதிகாரிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications