நெருப்போடு விளையாடாதீர்கள்.. சித்தராமையாவுக்கு வைகோ எச்சரிக்கை
புதுக்கோட்டை: கர்நாடகத்தில் தமிழக இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. நெருப்போடு விளையாட வேண்டாம் என்று கர்நாடக முதல்வரை நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
புதுக்கோட்டைக்கு வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு பக்கபலமாக உள்ளது. வெளிப்படையாக அனுமதி அளிக்காவிட்டாலும் அணை கட்டுப்படுவது உறுதியாகிவிடட்து.
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 15ஆயிரம் கனஅடி நீர் அளிக்காhமல் கண்துடைப்பிற்காக தற்போது அணையை திறந்து விட்டுள்ளனர். கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது என்ற போர்வையில்; கர்நாடகா மாநில அரசே மறைமுகமாக பந்தை நடத்தியது. இதில் தமிழக முதல்வரரின் உருவபொம்மையை எரித்து பாடை கட்டி போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு உரியது.
மத்திய அரசையும் தமிழக அரசையும் கர்நாடாக அரசு ஏமாற்றி வருகிறது. கர்நாடாகவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான் அரசியல் லாபத்திற்காக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசம் தற்போது ஆண்டு வரும் பாஜக அரசம் காவிரி மேலாண்மை வாரரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
கேரளம் ஒருபக்கத்தில் வஞ்சிக்கிறது. கர்நாடகம் மறு பக்கத்தில் வஞ்சிக்கிறது. ஆந்திரம் வஞ்சிக்கிறது. சிங்கள அரசு மீனவர்களை வஞ்சிக்கிறது. தமிழக முதல்வர் முல்லை பெரியார் பிரச்னையிலும் காவிரி பிரச்னையிலும் முறையாக உச்சநீதிமன்றத்தை அணுகி முறையான நடவடிக்கை எடுத்தார் என்பது யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைக்கு உள்ள நிலையில் கர்நாடகம் ஒட்டுமொத்தமாக ஓரணியில் உள்ளது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள்.
ஆனால் தமிழகம் பிளவுபட்டுள்ளது என்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்;படுத்தி விட்டார்கள். எனவே தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டதத்தை நடத்தி ஒரு முடிவு எடுத்து பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது பிரதமர் நியாயமாக நடந்து கொள்வார் என்பதற்காக அல்ல எதிரும் புதிருமாக உள்ள அதிமுக திமுக கட்சிகள் ஓரணியில் உள்ளது என்பதை நிருபிப்பதற்காக தான்.
தொடர்ந்து கர்நாடகம் முறைதவறி நடக்கிறது. தமிழகம் பொறுமையாக உள்ளது. பொறுமைக்கும் எல்லை உள்ளது. தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு செய்த தமிழ்; இளைஞர் ஒருவர் கர்நாடகாவில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்திற்கு உரியது. கர்நாடகா முதல்வர் நெருப்போடு விளையாடுகிறார். அங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது கர்நாடக அரசம் மத்திய அரசும் தான். அந்த இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியுமம் தேசிய ஒருமைபாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications