Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருப்போடு விளையாடாதீர்கள்.. சித்தராமையாவுக்கு வைகோ எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கர்நாடகத்தில் தமிழக இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. நெருப்போடு விளையாட வேண்டாம் என்று கர்நாடக முதல்வரை நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

புதுக்கோட்டைக்கு வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு பக்கபலமாக உள்ளது. வெளிப்படையாக அனுமதி அளிக்காவிட்டாலும் அணை கட்டுப்படுவது உறுதியாகிவிடட்து.

கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 15ஆயிரம் கனஅடி நீர் அளிக்காhமல் கண்துடைப்பிற்காக தற்போது அணையை திறந்து விட்டுள்ளனர். கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது என்ற போர்வையில்; கர்நாடகா மாநில அரசே மறைமுகமாக பந்தை நடத்தியது. இதில் தமிழக முதல்வரரின் உருவபொம்மையை எரித்து பாடை கட்டி போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு உரியது.

மத்திய அரசையும் தமிழக அரசையும் கர்நாடாக அரசு ஏமாற்றி வருகிறது. கர்நாடாகவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான் அரசியல் லாபத்திற்காக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசம் தற்போது ஆண்டு வரும் பாஜக அரசம் காவிரி மேலாண்மை வாரரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

கேரளம் ஒருபக்கத்தில் வஞ்சிக்கிறது. கர்நாடகம் மறு பக்கத்தில் வஞ்சிக்கிறது. ஆந்திரம் வஞ்சிக்கிறது. சிங்கள அரசு மீனவர்களை வஞ்சிக்கிறது. தமிழக முதல்வர் முல்லை பெரியார் பிரச்னையிலும் காவிரி பிரச்னையிலும் முறையாக உச்சநீதிமன்றத்தை அணுகி முறையான நடவடிக்கை எடுத்தார் என்பது யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைக்கு உள்ள நிலையில் கர்நாடகம் ஒட்டுமொத்தமாக ஓரணியில் உள்ளது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் தமிழகம் பிளவுபட்டுள்ளது என்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்;படுத்தி விட்டார்கள். எனவே தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டதத்தை நடத்தி ஒரு முடிவு எடுத்து பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது பிரதமர் நியாயமாக நடந்து கொள்வார் என்பதற்காக அல்ல எதிரும் புதிருமாக உள்ள அதிமுக திமுக கட்சிகள் ஓரணியில் உள்ளது என்பதை நிருபிப்பதற்காக தான்.

தொடர்ந்து கர்நாடகம் முறைதவறி நடக்கிறது. தமிழகம் பொறுமையாக உள்ளது. பொறுமைக்கும் எல்லை உள்ளது. தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு செய்த தமிழ்; இளைஞர் ஒருவர் கர்நாடகாவில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்திற்கு உரியது. கர்நாடகா முதல்வர் நெருப்போடு விளையாடுகிறார். அங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது கர்நாடக அரசம் மத்திய அரசும் தான். அந்த இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியுமம் தேசிய ஒருமைபாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+