என்னை வளர்ப்பு பிள்ளை என்றழைத்தவர் வாஜ்பாய்... கண்ணீர் விட்டு கதறிய வைகோ!

வாஜ்பாய் மறைவு செய்தியை கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் விட்டு கதறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாஜ்பாய் மறைவு செய்தியை கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் விட்டு கதறினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் வாஜ்பாய்.

Vaiko cries for Vajpayee demise

பாரத ரத்னா விருதுபெற்ற வாஜ்பாய் இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கண்ணீர் விட்டு குரல் தழுதழுத்து பேசினார்.

தன்னை வளர்ப்பு பிள்ளை என்று அழைத்தவர் வாஜ்பாய்.
மிகச் சிறந்த பேச்சாளர். மாபெரும் தலைவர் வாஜ்பாய் என வைகோ புகழாரம் சூட்டினார். சிறந்த கவிஞர், தலை சிறந்த பேச்சாளர் என்றும் புகழஞ்சலி செலுத்தினார்.

கூட்டணியில் பெரிய கட்சி சிறிய கட்சி என்ற பேதம் காட்டாதவர் வாஜ்பாய் என உணர்ச்சி பொங்க இரங்கல் தெரிவித்தார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+