For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யஷ்வந்த் சின்காவிற்கு விருந்து கொடுத்த வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மனித உரிமைகள் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இல்லத்துக்கு அழைத்து விருந்தளித்தார்.

தலைவர் வைகோவின் இல்லத்துக்கு வருகை தந்த யஷ்வந்த் சின்கா அவர்களை, வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார். அரசியல் நிலவரம் குறித்து இருவரும் நீண்ட நேரம் உரையாற்றினர்.

Vaiko host Yashwant Sinha

பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருண்ணன், இல.கணேசன், மோகன்ராஜூலு மற்றும் முன்னணியினரும் யஷ்வந்த் சின்காவுடன் வருகை தந்தனர்.

கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அ.கணேசமூர்த்தி எம்.பி., இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் தேவதாஸ், சதன் திருமலைக்குமார், மு.செந்திலதிபன், மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்ஆர்.செங்குட்டுவன், புலவர் செவந்தியப்பன், பாலவாக்கம் க.சோமு, சு.ஜீவன், குமரி விஜயகுமார், கவிஞர் தமிழ்மறவன், ஈட்டிமுனை இளமாறன், கவிஞர் மணிவேந்தன், மின்னல் முகமது அலி மற்றும் முன்னணியினர் கலநதுகொண்டனர்.

Vaiko host Yashwant Sinha

சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் மனித உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சிறப்புரையாற்ற உள்ளார்.

English summary
Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko and senior BJP leader Yashwant Sinha jointly participate in a conference here on Monday on human rights issues in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X