சோஷியல் மீடியா எங்களைப் பற்றி நல்லாவே பேசுது.. வைகோ ஹேப்பி
திருப்பூர்: திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள்நலக்கூட்டணி உருவாகியிருப்பதாகவும், சமூக வலைதளங்கள் மற்றும் இளைய தலைமுறையினர்களிடையே இந்தக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் மதிமுக கட்சியின் கொங்குமண்டல மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக திருப்பூர் வந்த வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள்நலக்கூட்டணி உருவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இளைய தலைமுறையினர்களிடையே மக்கள் நலக்கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.
மத்திய அரசிடம் நிலவி வந்த சகிப்புத்தன்மையின்மை, தற்போது தமிழக அரசிடம் நிலவிவருகிறது. வெள்ளபாதிப்பு குறித்த உண்மைச் செய்தியை .வெளியிட்ட ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டதே சகிப்புத்தன்மையின்மைக்கு எடுத்துக்காட்டு.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
ஊழல் மற்றும் மது இவை இரண்டாலும் திமுக , அதிமுக மக்கள் எதிர்ப்பை பெற்றுள்ளன..அதனால் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்காக மக்கள் நலக்கூட்டணி செயல்திட்டங்களை உருவாக்கி செயலாற்றி வருகின்றோம். தவறுகளுக்கு இடம் கொடுக்காத கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த மக்கள் விரும்புகிறார்கள்.
சகாயம் அறிக்கையில் திமுக அதிமுக இரண்டும் மவுனம் சாதிக்கிறது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications