விஜயகாந்தும், வாசனும் எங்கள் கூட்டணியில் கைகோர்ப்பார்கள் - வைகோ நம்பிக்கை
சென்னை: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் தமாகா தலைவர் வாசன் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மழை வெள்ளத்தால் சிறு, குறு தொழில் செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் தொழில் தொடங்கவும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் வாசன் ஆகியோர் மக்கள் நலக் கூட்டியக்கத்தில் கைகோர்க்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அந்த வேண்டுகோளுக்கு அவர்கள் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் நலக் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி என்று விஜயகாந்த் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications