ராம்குமார் மர்ம மரணம்- நீதி விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் விசாரணை கைதியான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைத்துறையினர் கூறுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அன்று தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரில் ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்த போதே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தக்க பாதுகாப்புடன்தான் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாதுகாப்பே இல்லையா?
ராம்குமார் சிறையின் உள்ளே கட்டுக்காவல்களை மீறி, சமையல் அறைக்குச் சென்று மின் கம்பியை கடித்து, தன் உடலில் தானே மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுவது நம்பும் படியாக இல்லை. அப்படி எனில் புழல் சிறையில் கண்காணிப்புகள் இல்லாமல்தான் கைதிகள் இருக்கின்றனரா?

வேடிக்கை பார்த்தனரா?
சிறைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களா? சிறையில் நடந்த இந்தச் செயலுக்கு சிறைத்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

நீதி விசாரணை
ஒரு முக்கியமான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் தற்சொலை செய்து கொண்டார் என்று அரசு தரப்பில் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சுவாதி கொலை வழக்கின் பின்னணி குறித்தும், சிறையில் ராம்குமார் தற்கொலை குறித்தும், உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications