சந்திரகுமார் மூலமாக தேமுதிகவை உடைக்க திமுக முயற்சி: வைகோ குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்: தேமுதிகவை உடைக்க சந்திரகுமார் மூலமாக திமுக முயற்சி செய்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டுரில் வரும் 10ம் தேதி தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் அரசியல் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதிஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கூட்டணி கட்சிகள் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், கருணாநிதி குறித்து நான் தவறுதலாக பேசியது வேதனை அளிக்கிறது என்றார். தேமுதிக கட்சியின் கொடி, சின்னம், கட்சியை கைப்பற்ற சந்திரகுமார் மூலம் திமுக முயற்சி செய்து வருவதாகவும், அதன் பிண்ணனியில் திமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்தது போல் தற்போது தேமுதிகவை உடைக்க திமுக முயன்று வருவதாக குற்றம்சாட்டினார். திமுகவின் இதுபோன்ற செயல்கள் மாமண்டூரில் நடைபெறும் மாநாட்டிற்கு விளம்பரமாக அமைந்துள்ளது. இந்த மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications