பிரச்சாரத்தில் யாரையும் திட்ட வேண்டாம்... வைகோ
தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் யாரையும் திட்ட மாட்டேன்... எனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும், யாரையும் திட்ட மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அதேபோல பிரச்சாரத்திற்கு வரும் போது பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சிறுவர்கள், குழந்தைகள், பெண்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் மதிமுக தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்யுள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வைகோ நேற்று திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிலைமானில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 21 இடங்களில் பேசினார்.
இரண்டாம் நாளான இன்று திங்கட்கிழமை வைகோ மேற்கொள்ளும் சுற்றுப்பயண விபரம்:
மாலை 4 மணி - தோப்பூர்
மாலை 4.15 மணி - நேதாஜி காலனி
மாலை 4.30 மணி - வேடர் புளியங்குளம்
மாலை 4.45 மணி - சாக்கிலிபட்டி
மாலை 5 மணி - தென்பழஞ்சி
மாலை 5.15 மணி - சின்ன சாக்கிலிபட்டி
மாலை 5.30 மணி - வடபழஞ்சி
மாலை 5.45 மணி - வடபழஞ்சி பல்கலை நகர் (இரயில்வே கேட்)
மாலை 6 மணி - ஆலம்பட்டி
மாலை 6.15 மணி - நா.புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் காலேஜ்
மாலை 6.30 மணி - மேலக்குயில்குடி
மாலை 6.45 மணி - நா.புதுக்கோட்டை (கீழக்குடி விலக்கு)
இரவு 7 மணி - கீழக்குயில்குடி (மந்தை திடல்)
இரவு 7.15 மணி - வடிவேல்கரை மந்தை திடல்
இரவு 7.30 மணி - சீனிவாச காலனி
இரவு 7.45 மணி - தனக்கன்குளம் மந்தை திடல்
இரவு 8 மணி - திருவள்ளுவர் காலனி
இரவு 8.15 மணி - தனக்கன்குளம் பி.ஆர்.சி. காலனி
இரவு 8.30 மணி - திருநகர் 2 பஸ் நிறுத்தம்
இரவு 8.45 மணி - திருநகர் 5 பஸ்நிறுத்தம்
இரவு 9 மணி - மகாலட்சுமி காலனி பஸ் நிறுத்தம்
இரவு 9.15 மணி - விளாச்சேரி தேவர் திடல்
இரவு 9.30 மணி - விளாச்சேரி மந்தை முஸ்லிம் தர்க்கா
இரவு 9.45 மணி - தியாகராசர் காலனி (நிறைவு)