Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மழை: தவிக்கும் மக்களுக்கு வைகோ உணவு வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சமைக்க முடியாதல் தடுமாறி வரும் மக்களக்கு உ ணவு வழங்கினார்.

Vaiko visits rain affected area in Chenni

விடாது பெய்து வரும் கனமழையால் சென்னை நகரம் தத்தளித்து வருகிறது. சாலைகளே தெரியாத அளவிற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளன. தாழ்வான பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏராளமானோர் உணவு சமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Vaiko visits rain affected area in Chenni

அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டாலும் அரசியல் கட்சியினர் பலரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை ஆயிரம்விளக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள தருமாபுரத்தில் வெள்ள சேதப் பகுதிகளை வீதி வீதியாக பார்வையிட்டு, வெள்ள சேத பாதிப்புகளை கேட்டறிந்தார்.

Vaiko visits rain affected area in Chenni

மதிமுக சார்பில் சாம்பார்சாதம் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதனை வைகோ அனைவருக்கும் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். உடன் ஆயிரம் விளக்குப் பகுதிப் பொறுப்பாளர் டி.ஜெ.தங்கவேலு, மாமன்ற முன்னாள் உறுப்பினர் திராவிட நாடு முனுசாமி, கேபிள் டி.வி.ராஜா, தர்மாபுரம் அசோக், மு.மாயன், சுரேஷ் அப்பன் துரை உள்ளட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Vaiko visits rain affected area in Chenni
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+